திங்கள், 2 நவம்பர், 2020

டிராட்ஸ்கி குறித்து லெனின் மனைவி குரூப்ஸ்கயா

 


டிராட்ஸ்கியின் உண்மை முகம் பற்றி லெனினது மனைவி நதேழ்தா குரூப்ஸ்கயா எத்தகைய கருத்துக் கொண்டிருந்தார் என்பதை அறிவது ஆர்வமூட்டுவது ஆகும்.
“டிராட்ஸ்கியவாதிகளும் ஜினோவியவாதிகளும் வெகுஜனங்களைப் பற்றிச் சிந்திக்கவில்லை. அவர்கள் யதார்த்த உலகத்தில் வாழவில்லை. பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் மிக முக்கியமான எதிரிகளான கெஸ்டபோவுடன் ஒரு ஒப்பந்தம் செய்வதன் மூலமாகக் கூட அதிகாரத்தை எவ்வாறு கைப்பற்றுவது என்பது பற்றி மட்டுமே அவர்கள் நினைத்துக் கொண்டு இருந்தார்கள். இதன் மூலம் சோவியத்துகளின் நாட்டில் உழைக்கும் மக்களின் மீது முதலாளித்துவ சுரண்டலையும் முதலாளித்துவ கட்டமைப்பையும் மீண்டும் ஸ்தாபிக்க முயற்சி செய்கிறார்கள்.
பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் சாரத்தை ஒருபோதும் புரிந்து கொள்ளாத டிராட்ஸ்கி, சோசலிசத்தை கட்டியெழுப்புவதில் மக்களின் பங்கு குறித்தும் புரிந்து கொள்ளவே இல்லை, இது ஒரு தற்செயல் நிகழ்வு கிடையாது.
மேலிருந்து உத்தரவிடுவதன் மூலம் மட்டுமே சோசலிசத்தைக் கட்டியெழுப்பி விட முடியும் என்று நினைத்து, இப்போது சோசலிசத்தை கட்டியெழுப்ப மக்களுக்கு உதவுகின்ற ஸ்டாலின், வோரோஷிலோவ் மற்றும் பொலிட்பீரோவின் மற்ற உறுப்பினர்களுக்கு எதிராக பயங்கரவாத செயல்களை ஒழுங்கமைக்கும் பாதையில் நிற்கிறார்.
ஆகவே, டிராட்ஸ்கி, கமெனேவ் மற்றும் ஜினோவியேவ் ஆகியோரின் கொள்கையற்ற கூட்டணி, லெனினது பணிகள், வெகுஜனங்களின் பணி, சோசலிச இலட்சியங்கள் ஆகியவற்றை முன்னெப்போதும் கேள்விப்பட்டிராதவாறு காட்டிக் கொடுக்கும் அளவுக்கு அவர்களை ஒரு படுகுழியில் இருந்து மற்றொரு ஆழமான படுகுழிக்குத் தள்ளி வருகிறது. இது தற்செயலானது அல்ல. டிராட்ஸ்கி, ஜினோவியேவ்,
கமெனேவ் மற்றும் அவர்களது கொலையாளிகள் குழு முழுவதும் ஜெர்மானிய பாசிஸ்டுகளுடன் இணைந்து செயல்பட்டன, கெஸ்டபோவுடன் ஒப்பந்தம் செய்து கொண்டன.” (Why is the Second International Defending Trotsky)
டிராட்ஸ்கியின் "பெருமை"களை எத்தனை சிறப்பாகக் கூறி இருக்கிறார் நதேழ்தா குரூப்ஸ்கயா!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

  சமூக ஜனநாயகவாதிகளுக்கு எதிரான ஜெர்மன் கம்யூனிஸ்டு கட்சியின் போர்த்தந்திரம் குறித்து   ஜெர்மனியில் நாஜிக்களுக்கு எதிரான போராட...