சனி, 28 நவம்பர், 2020

மக்கள் தலைவன்



மக்கள் தலைவன் என்பவன் எப்படி இருக்க வேண்டும், நெருக்கடியான தருணத்தில் நாட்டையும் மக்களையும் எப்படி வழிநடத்த வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டு ஆக வாழ்ந்து காட்டியவர் ஸ்டாலின்.

ஜூன் 22, 1941 அன்று நாஜி ஜெர்மனி சோவியத் யூனியன் மீது தனது நாசகாரத் தாக்குதலைத் தொடங்கியது. மிக விரைவாக பல பகுதிகளைக் கைப்பற்றி பேரழிவை ஏற்படுத்தி முன்னேறியது ஜெர்மன் படை. அக்டோபர் 2, 1941 அன்று மாஸ்கோ நகரத்தின் மீது தனது முதலாவது தாக்குதலைத் தொடங்கியது.

மாஸ்கோ நகரத்தில் இருந்து முதியவர்கள், குழந்தைகள் எனப் பலரும் வெளியேற்றப் பட்டனர். நகரைப் பாதுகாப்பதற்குக் கடுமையான ஏற்பாடுகளை மேற்கொண்டது செம்படை. மாஸ்கோ நகர மக்கள் அனைவரும் இறுதி யுத்தத்திற்கு முழு வேகத்துடன் செம்படைக்கு உதவினர். தோழர் ஸ்டாலின் நகரப் பாதுகாப்புக்கான கமிட்டியின் கூட்டங்களில் கலந்து கொண்டு நேரடியாகத் தாக்குதலுக்கு வழிகாட்டினார். ஜெர்மன் விமானங்கள் தாக்குதல் நடத்திக் கொண்டிருந்த போதிலும் நகரின் பல பகுதிகளுக்குச் சென்று போர் நடவடிக்கைகளை நேரடியாக ஆய்வு செய்தார். தினமும் தடுப்பு அரண்கள், பதுங்கு குழிகள் என ஒவ்வொன்றையும் பார்வையிட்டு தேவைப்பட்ட போது மாற்று ஏற்பாடுகள் செய்வதற்கு உடனடி உத்திரவிட்டு நடைமுறைப் படுத்தினார். ஒரு சில இரண்டாம் நிலைத் தலைவர்கள் கூட மனமொடிந்து சோர்ந்து போன போதும், முழுமையான மன உறுதியுடன் செயல்பட்டார். நாம் தான் வெற்றி பெறுவோம் என்பதில் ஐயம் வேண்டாம் என்று மாஸ்கோ நகர மக்களுக்கு நேரடியாக அறிவுறுத்தினார்.

ஒரு கட்டத்தில் நிலைமை மோசமான போது அரசுத் தலைமையகத்தை குய்பிஷேவ் பகுதிக்கு மாற்றுவதற்கு முடிவு செய்யப்பட்ட போதும் அதற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்கு இரண்டாம் நிலைத் தலைவர்களை அனுப்பி விட்டு தான் கடைசி வரையில் மாஸ்கோவில் மட்டுமே இருப்பது என்று உறுதியுடன் செயல்பட்டார்.

எல்லாவற்றுக்கும் மேலாக, நவம்பர் புரட்சி தினம் அன்று, இத்தனை அச்சுறுத்தல்களுக்கும் நடுவே மாஸ்கோ நகரில் படைகளின் வெற்றிப் பேரணியையும் நடத்தினார்!

இத்தகைய அசாதாரணச் செயல்களைச் செய்யக் கூடிய தலைவன் வேறு யாரும் இருக்க முடியாது.

இவை அனைத்துக்கும் மேலாக, இரண்டாம் உலகப் போரில் வெற்றி பெற்ற பின்னர், அந்த வெற்றிக்குக் காரணம் ஸ்டாலின் தான் என்று சொன்ன போது அதை மறுத்து, இல்லை சோவியத் மக்கள் தான் வெற்றிக்குக் காரணம் என்று சொன்னார்!



திங்கள், 2 நவம்பர், 2020

டிராட்ஸ்கி குறித்து லெனின் மனைவி குரூப்ஸ்கயா

 


டிராட்ஸ்கியின் உண்மை முகம் பற்றி லெனினது மனைவி நதேழ்தா குரூப்ஸ்கயா எத்தகைய கருத்துக் கொண்டிருந்தார் என்பதை அறிவது ஆர்வமூட்டுவது ஆகும்.
“டிராட்ஸ்கியவாதிகளும் ஜினோவியவாதிகளும் வெகுஜனங்களைப் பற்றிச் சிந்திக்கவில்லை. அவர்கள் யதார்த்த உலகத்தில் வாழவில்லை. பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் மிக முக்கியமான எதிரிகளான கெஸ்டபோவுடன் ஒரு ஒப்பந்தம் செய்வதன் மூலமாகக் கூட அதிகாரத்தை எவ்வாறு கைப்பற்றுவது என்பது பற்றி மட்டுமே அவர்கள் நினைத்துக் கொண்டு இருந்தார்கள். இதன் மூலம் சோவியத்துகளின் நாட்டில் உழைக்கும் மக்களின் மீது முதலாளித்துவ சுரண்டலையும் முதலாளித்துவ கட்டமைப்பையும் மீண்டும் ஸ்தாபிக்க முயற்சி செய்கிறார்கள்.
பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் சாரத்தை ஒருபோதும் புரிந்து கொள்ளாத டிராட்ஸ்கி, சோசலிசத்தை கட்டியெழுப்புவதில் மக்களின் பங்கு குறித்தும் புரிந்து கொள்ளவே இல்லை, இது ஒரு தற்செயல் நிகழ்வு கிடையாது.
மேலிருந்து உத்தரவிடுவதன் மூலம் மட்டுமே சோசலிசத்தைக் கட்டியெழுப்பி விட முடியும் என்று நினைத்து, இப்போது சோசலிசத்தை கட்டியெழுப்ப மக்களுக்கு உதவுகின்ற ஸ்டாலின், வோரோஷிலோவ் மற்றும் பொலிட்பீரோவின் மற்ற உறுப்பினர்களுக்கு எதிராக பயங்கரவாத செயல்களை ஒழுங்கமைக்கும் பாதையில் நிற்கிறார்.
ஆகவே, டிராட்ஸ்கி, கமெனேவ் மற்றும் ஜினோவியேவ் ஆகியோரின் கொள்கையற்ற கூட்டணி, லெனினது பணிகள், வெகுஜனங்களின் பணி, சோசலிச இலட்சியங்கள் ஆகியவற்றை முன்னெப்போதும் கேள்விப்பட்டிராதவாறு காட்டிக் கொடுக்கும் அளவுக்கு அவர்களை ஒரு படுகுழியில் இருந்து மற்றொரு ஆழமான படுகுழிக்குத் தள்ளி வருகிறது. இது தற்செயலானது அல்ல. டிராட்ஸ்கி, ஜினோவியேவ்,
கமெனேவ் மற்றும் அவர்களது கொலையாளிகள் குழு முழுவதும் ஜெர்மானிய பாசிஸ்டுகளுடன் இணைந்து செயல்பட்டன, கெஸ்டபோவுடன் ஒப்பந்தம் செய்து கொண்டன.” (Why is the Second International Defending Trotsky)
டிராட்ஸ்கியின் "பெருமை"களை எத்தனை சிறப்பாகக் கூறி இருக்கிறார் நதேழ்தா குரூப்ஸ்கயா!!!

போர் கமிசார் டிராட்ஸ்கி

சோவியத் உள்நாட்டுப் போர் காலத்தில் போர் கமிசார் ஆக இருந்தவர் டிராட்ஸ்கி.
அந்த வகையில் செஞ்சேனையின் தலைமை அதிகாரம் அவரிடம் இருந்தது என்று கூறலாம்.
அதனால் ஏதோ டிராட்ஸ்கி தான் மல்லாக்க விழுந்து கிடந்த சோவியத் யூனியனைத் தனியனாக இருந்து கொண்டு செங்குத்தாகத் தூக்கி நிறுத்தினார் என்பது போலவும், அவர் மட்டும் இல்லாதிருந்தால் சோவியத் யூனியன் சிதறிப் போயிருக்கும் என்பது போலவும் பொய்ச் சித்திரத்தை உருவாக்க டிராட்ஸ்கியப் பொய்யர்கள் முயற்சிக்கிறார்கள்.
ஆனால் உண்மை வேறு விதமாக இருக்கிறது.
சாரிட்சன் போர் முதல் பிரேமின் யூரல்ஸ், பெத்ரோகிராத், கிரஸ்னயா கொர்க்கா, டோனெட்ஸ், கார்கொவ், லவோவ் என ஏராளமான போர் முனைகளில் பெறப்பட்ட திருப்புமுனை வெற்றிகளுக்கு ஸ்டாலினே காரணமாக இருந்தார்.
அதனால் சோவியத் கம்யூனிஸ்டு கட்சியும், லெனினும் அவரைத் தொடர்ந்து மீண்டும் மீண்டும் வெவ்வேறு போர்முனைகளுக்கு அனுப்பிக் கொண்டே இருந்தனர்.
சில போர் முனைகளில் - குறிப்பாக சாரிட்சன் மற்றும் டோனெட்ஸ் பகுதிகளில் – செம்படைகளின் சறுக்கலுக்கு டிராட்ஸ்கி நேரடிக் காரணமாகவே இருந்தார். அதனை மாற்றியமைப்பவராக ஸ்டாலின் இருந்தார். தனது பணிகளில் டிராட்ஸ்கி தலையிடக் கூடாது என்ற ஸ்டாலினின் நிபந்தனையை ஏற்றுக் கொண்டு தெற்குப் போர் முனைக்கு அவரை அனுப்பியது சோவியத் கம்யூனிஸ்டு கட்சி!!!
சோவியத் கம்யூனிஸ்டு கட்சியின் எட்டாவது காங்கிரசில் அவரது அபத்தமான முடிவுகளுக்காக டிராட்ஸ்கி கடுமையாக விமரிசிக்கப் பட்டார்.

ஆக, உள்நாட்டுப் போரில் சோவியத் யூனியன் பெற்ற வெற்றியானது போர் கமிசார் ஆக இருந்த டிராட்ஸ்கியால் கிடைத்த வெற்றி அல்ல, மாறாக அது அவரையும் மீறி பறித்தெடுக்கப்பட்ட வெற்றி (Not because of Trotsky but despite Trotsky) என்பது உறுதியாகத் தெரிகிறது. 




  சமூக ஜனநாயகவாதிகளுக்கு எதிரான ஜெர்மன் கம்யூனிஸ்டு கட்சியின் போர்த்தந்திரம் குறித்து   ஜெர்மனியில் நாஜிக்களுக்கு எதிரான போராட...