வெள்ளி, 9 அக்டோபர், 2020

முதலாளித்துவ நாடுகளில் கம்யூனிஸ்டுகள் மக்கள் செல்வாக்கைப் பெறுவது பற்றி

 


“1952ஆம் ஆண்டில் சோவியத் கம்யூனிஸ்டு கட்சியின் பத்தொன்பதாவது காங்கிரசுக்கு அளித்த தனது இறுதி பொது உரையில், இன்னமும் புரட்சியை நடத்தி முடிக்காத கட்சிகள் கடைப்பிடிக்க வேண்டிய சரியான புரட்சிகர பாதையை ஸ்டாலின் விளக்குகிறார்.
 
உலகப் புரட்சியின் வெற்றிகள் முதலாளித்துவ உலகத்தை சுருங்கச் செய்து, ஏகாதிபத்திய சக்திகளை சிதைவடையச் செய்துள்ளது. எனவே மேற்கத்திய ஜனநாயக நாடுகளின் முதலாளித்துவம், தோற்கடிக்கப்பட்ட பாசிச சக்திகளின் பதாகைகளை மரபுரிமையாகப் பெறுகிறது, அத்தகைய சக்திகளுடன் உலகளாவிய கூட்டணியை நிறுவுகிறது, உள்நாட்டில் பாசிசத்தை நோக்கித் திரும்புகிறது, புதிய காலனித்துவ நாடுகளின் முதலாளித்துவம் அவர்களின் கைப்பாவைகளாக மாறும்.
 
பின்னர் கம்யூனிஸ்டுகள், முதலாளித்துவ வர்க்கம் ஒரு புரட்சிகர வர்க்கமாக இருந்தபோது நிறுவப்பட்டு, அது சிதையும் சகாப்தம் வரை அதனால் பாதுகாக்கப்பட்ட சுதந்திரங்கள் மற்றும் முற்போக்கான கொள்கைகள் ஆகியவற்றின் முக்கியப் பாதுகாவலர்களாக மாறுகிறார்கள். 
 
முதலாளித்துவத்தால் தூக்கி எறியப்பட்ட தேசிய சுதந்திரம் மற்றும் ஜனநாயக சுதந்திரங்கள் ஆகியவற்றை உயர்த்திப் பிடித்துப் பாதுகாக்கும் போதுதான் கம்யூனிஸ்டுகள் அந்தந்த நாடுகளில் உள்ள பெரும்பான்மையான மக்களை வழிநடத்துவார்கள்.”
 
On Stalin நூலில் இருந்து

  சமூக ஜனநாயகவாதிகளுக்கு எதிரான ஜெர்மன் கம்யூனிஸ்டு கட்சியின் போர்த்தந்திரம் குறித்து   ஜெர்மனியில் நாஜிக்களுக்கு எதிரான போராட...