லெனின் தனது இறுதிக் காலத்தில் ஸ்டாலினுடன் மிக மோசமான
கருத்து வேறுபாடு கொண்டிருந்தார்...
இருவருக்கும் இடையில் உறவு மிக மோசமான முறையில்
சீர்கெட்டு இருந்தது...
லெனின் உடல்நிலை தேறினால், தனது அரசியல் வாழ்வு
முடிவுக்கு வந்து விடும் என்று ஸ்டாலின் அஞ்சினார்...
ஆகவே தான் அவர் லெனினுக்கு விஷம் வைத்துக் கொலை செய்தார்
என்று நம்புவதற்குக் காரணம் இருக்கிறது...
இவையெல்லாம் ஸ்டாலின் குறித்து டிராட்ஸ்கியவாதிகள் கூறும்
அவதூறுகளின் ஒரு பகுதி.
லெனின் பக்கவாத நோயால் பாதிக்கப் பட்டு, உடலின் ஒரு பகுதி செயலிழந்த நிலையில் இருந்த போது, முழுமையாக அவருடன் இருந்த லெனினின் சகோதரி மரியா உலியனோவா, லெனின் மற்றும் ஸ்டாலின் ஆகியோருக்கு இடையிலான உறவு
பற்றிக் கூறியது:
“லெனின் உண்மையில் ஸ்டாலினை வெகுவாகப்
பாராட்டினார். உதாரணமாக, 1922 ஆம் ஆண்டு வசந்த காலத்தில்
லெனின் முதல் முறையாக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட போதும், 1922 டிசம்பரில் இரண்டாவது முறை பாதிக்கப்பட்ட போதும், அவர் ஸ்டாலினை அழைத்து மிக நெருக்கமான பணிகளைக்
கொடுத்தார்.....
மேலும், தான் ஸ்டாலினுடன் மட்டுமே
பேச விரும்புவதாகவும், வேறு யாருடனும் பேச
விரும்பவில்லை என்றும் லெனின் வலியுறுத்தினார்.
பொதுவாக அவர் நோய்வாய்ப் பட்டு இருந்த காலம் முழுமையும், தோழர்களுடன் தொடர்பில் இருக்கும் வாய்ப்பு இருந்த காலம்
வரையிலும், அவர் ஸ்டாலினையே அதிகமான
முறைகள் அழைத்தார்.
மேலும் அவர் மோசமாக நோய்வாய்ப் பட்டு இருந்த காலம்
முழுவதும், பொலிட்பீரோ உறுப்பினர்களில்
ஸ்டாலினைத் தவிர வேறு எவரையும் அழைக்கவே இல்லை”.
இது போன்ற தரவுகள் தமிழில் இல்லை என்பதால் இங்கே
டிராட்ஸ்கிய கூட்டம் பொய்களைக் கடைவிரித்துக் கொண்டிருக்கிறது.
இன்னும் எத்தனை காலம்?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக