திங்கள், 2 நவம்பர், 2020

போர் கமிசார் டிராட்ஸ்கி

சோவியத் உள்நாட்டுப் போர் காலத்தில் போர் கமிசார் ஆக இருந்தவர் டிராட்ஸ்கி.
அந்த வகையில் செஞ்சேனையின் தலைமை அதிகாரம் அவரிடம் இருந்தது என்று கூறலாம்.
அதனால் ஏதோ டிராட்ஸ்கி தான் மல்லாக்க விழுந்து கிடந்த சோவியத் யூனியனைத் தனியனாக இருந்து கொண்டு செங்குத்தாகத் தூக்கி நிறுத்தினார் என்பது போலவும், அவர் மட்டும் இல்லாதிருந்தால் சோவியத் யூனியன் சிதறிப் போயிருக்கும் என்பது போலவும் பொய்ச் சித்திரத்தை உருவாக்க டிராட்ஸ்கியப் பொய்யர்கள் முயற்சிக்கிறார்கள்.
ஆனால் உண்மை வேறு விதமாக இருக்கிறது.
சாரிட்சன் போர் முதல் பிரேமின் யூரல்ஸ், பெத்ரோகிராத், கிரஸ்னயா கொர்க்கா, டோனெட்ஸ், கார்கொவ், லவோவ் என ஏராளமான போர் முனைகளில் பெறப்பட்ட திருப்புமுனை வெற்றிகளுக்கு ஸ்டாலினே காரணமாக இருந்தார்.
அதனால் சோவியத் கம்யூனிஸ்டு கட்சியும், லெனினும் அவரைத் தொடர்ந்து மீண்டும் மீண்டும் வெவ்வேறு போர்முனைகளுக்கு அனுப்பிக் கொண்டே இருந்தனர்.
சில போர் முனைகளில் - குறிப்பாக சாரிட்சன் மற்றும் டோனெட்ஸ் பகுதிகளில் – செம்படைகளின் சறுக்கலுக்கு டிராட்ஸ்கி நேரடிக் காரணமாகவே இருந்தார். அதனை மாற்றியமைப்பவராக ஸ்டாலின் இருந்தார். தனது பணிகளில் டிராட்ஸ்கி தலையிடக் கூடாது என்ற ஸ்டாலினின் நிபந்தனையை ஏற்றுக் கொண்டு தெற்குப் போர் முனைக்கு அவரை அனுப்பியது சோவியத் கம்யூனிஸ்டு கட்சி!!!
சோவியத் கம்யூனிஸ்டு கட்சியின் எட்டாவது காங்கிரசில் அவரது அபத்தமான முடிவுகளுக்காக டிராட்ஸ்கி கடுமையாக விமரிசிக்கப் பட்டார்.

ஆக, உள்நாட்டுப் போரில் சோவியத் யூனியன் பெற்ற வெற்றியானது போர் கமிசார் ஆக இருந்த டிராட்ஸ்கியால் கிடைத்த வெற்றி அல்ல, மாறாக அது அவரையும் மீறி பறித்தெடுக்கப்பட்ட வெற்றி (Not because of Trotsky but despite Trotsky) என்பது உறுதியாகத் தெரிகிறது. 




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

  சமூக ஜனநாயகவாதிகளுக்கு எதிரான ஜெர்மன் கம்யூனிஸ்டு கட்சியின் போர்த்தந்திரம் குறித்து   ஜெர்மனியில் நாஜிக்களுக்கு எதிரான போராட...